logo

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள கதிர் நரசிங்கபுரம் - தோப்புபட்டியில் எழுந்தருளியிருக்கும் வீரசின்னம்மாள் கோயில் திருவிழா 23/04/24 - 25/04/24 ஆகிய மூன்று தினங்கள் மிகவும் சிறப்புடன்!!!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள கதிர் நரசிங்கபுரம் - தோப்புபட்டியில் எழுந்தருளியிருக்கும் வீரசின்னம்மாள் கோயில் திருவிழா 23/04/24 - 25/04/24 ஆகிய மூன்று தினங்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக இராஜதானி கோயில் வீட்டில் இருந்து அம்மனின் பெட்டி அலங்காரத்துடன் கரகம் எடுத்து வாணவேடிக்கையுடன் ஊர் சுற்றி ஆங்காங்கே பொது மக்களுக்கு ஆசிகள் உடன் தோப்புபட்டி கோயில் வந்தடைந்தது. இன்று இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக அம்மனுக்கு பொங்கல் இட்டு சிறப்பு பூஜைகள் செய்தும், பொது மக்களுக்கு காட்சி தருகிறார்..... இந்த திருவிழாவில் மூன்று தினங்களும் பக்தர்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்ற அனைத்து பொதுமக்கள் அனைவருக்கும் மூன்று தினங்களும் விருந்துணவினை கோயில் நிர்வாகத்தினர் வழங்கி வருகின்றனர்... அம்மனின் அருளை பெற்றுச் செல்வதற்கு பல ஊர்களில் இருந்து வந்து கோயில் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டு வரும் நிகழ்ச்சி................................................................ ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி

94
4422 views